For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமியாரின் கள்ளக் காதலன் கொலை: மருமகன் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மாமியாரின் கள்ளக் காதலைப் பொறுக்க முடியாத மருமகன், கள்ளக்காதலனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

சென்னை கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் டார்லிங் பாய். 49 வயதாகும் இவர் கணவரைப் பிரிந்து தனதுகுழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். தமிழக மின்வாரியத்தில் கிளர்க் ஆக பணிபுரிந்து வந்தார்.

டார்லிங் பாய்க்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் 1 மகள் மற்றும் மகனுக்கு திருமணமாகி விட்டது.கடைசி மகள் பிளஸ் டூ படித்து வருகிறார். இந் நிலையில், டார்லிங் பாய்க்கும், ராஜேந்திரன் என்பவருக்கும் இடையேகள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இவர் திருவாரூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்த இருவரும், நாளடைவில் சேர்ந்து வாழத்தொடங்கினர். டார்லிங் பாயின் வீட்டிலேயே ராஜேந்திரன் தங்கத் தொடங்கினார். இது டார்லிங் பாயின் மருமகன் ஹாஸ்பருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயது போன காலத்தில் இதுபோல நடப்பது அசிங்கமாக இல்லையா என்று அவர் மாமியாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதைஅவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ராஜேந்திரனையும் கூப்பிட்டு எச்சரித்துள்ளார். அவரும் கண்டுகொள்ளவில்லை.

இந் நிலையில் கடந்த 28ம் தேதி ராஜேந்திரன் வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றுமுதலில் கருதப்பட்டது. இருப்பினும் ராஜேந்திரன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீஸில் தகவல்தெரிவித்தனர்.

இதன் அடிப்படையிலும், பிரேதப் பரிசோதனையின் அடிப்படையிலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில்ஹாஸ்பர் சிக்கினார். மாமியாரின் நடத்தை பிடிக்காத காரணத்தால் தான் ராஜேந்திரனைத் கொலை செய்ததாக ஹாஸ்பர்போலீஸாரிடம் தெரிவித்தார்.

மேலும் தனக்கு உதவியாக சிவக்குமார், முருகன் ஆகியோர் இருந்ததாகவும் ஹாஸ்பர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்துஅவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X