மெரீனாவில் நடந்த பயங்கரக் கொலை
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை இரவு கூட்ட நெரிசல் மிக்க இடத்தில் வியாபாரிகள் சங்கப் பிரகர்வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தமிழ்நாடு வர்த்தக கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் எஸ்.ஏ.எஸ். தனபாலன். தூத்துக்குடி மாவட்டம்சித்தவநாயக்கன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையில் வசித்து வருகிறார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் மெரீனா கடற்கரையில் தனபாலன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.அப்போது 3 பேர் கொண்ட கும்பல் தனபாலனை வழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது.
கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்கள், காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த அனைவரும் இந்தக் கொலையைப்பார்த்து ஸ்தம்பித்தனர். உடனடியாக போலீஸ் படை அங்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டது.
நாடார் சங்கத்திற்குச் சொந்தமாக உள்ள இரண்டு கல்யாண மண்டபங்களை நிர்வகிப்பது தொடர்பாக உட்பூசல் இருந்ததாகவும்,அதன் தொடர்ச்சியாகவே தனபாலன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications