பாஸ்வானுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் அங்குள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இன்று மாலை விமானம் மூலம் டெல்லிகொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துஅறிந்ததும் பீகார் கவர்னர் பூட்டாசிங் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
பஸ்வானை விமானம் மூலம் டில்லிக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை அவர் விமானம்மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறார். டெல்லியிலுள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் அவரை அனுமதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications