மாணவர்களுக்கு கல்வி கடன் உறுதி: ப. சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மாணவர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிச்சயம் கல்வி கடன் கிடைக்கும். இதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதுஎன்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

கனரா வங்கியின் வித்யாசாகர் கல்விக் கடன் திட்டத்தை மத்திய அமைச்சர் சிதம்பரம் நேற்று பெங்களூரில் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், உலகிலேயே இந்தியா மிகச் சிறந்த மனித வளம் கொண்ட நாடாக உள்ளது. நம் நாட்டுஇளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள்.

ஆனால்ா கிராமங்களில் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் மாணவர்களால் சரியான கல்விமுறையை பெற முடிவதில்லை.இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஒரு வருடமாக கல்விக் கடன் திட்டத்தை வியக்கத்தக்க அளவில்செயல்படுத்தி உள்ளது.

இதுவரை 55,365 மாணவர்கள் கல்விக் கடன் பெற்றுள்ளனர். கடந்த ஒரு வருடம் மட்டும் 35, 912 மாணவர்கள் கல்விக் கடன்பெற்றுள்ளனர்.

தொழிற்கல்வி படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் எவரும் கட்டணம் செலுத்த பணமில்லை என்ற காரணத்திற்காக படிப்பைகைவிடும் நிலை இனி கண்டிப்பாக இருக்காது. ஒரு நிலையான அரசு மக்கள் நலனுக்கான காரியங்களை பல்வேறுநிலைகளிலும் செய்ய முடியும் என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+