சிவகாசியில் பட்டாசு ஆலையில் தீ: 20 பேர் பலி
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதில் 20 தொழிலாளர்கள் கருகி இறந்தனர்.மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சாவுஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இங்குள்ள வடிவேல் பட்டாசுத் தொழிற்சாலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் தீப்பிடித்தது. இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டசுகள்வெடித்துச் சிதறின.
இதில் தொழிற்சாலை தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 15க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக சிவகாசி மற்றும் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications