பொறியியல் மாணவர்கள் டீ சர்ட் அணிய தடை?
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் டீ சர்ட் அணிய தடை விதிப்பதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் யோசித்து வருகிறது.
கல்லூரி மாணவ, மாணவியருக்கு சீருடை என்று எதுவும் கிடையாது. தங்களுக்கு விருப்பமான உடையை அணிந்து வரலாம்.ஆனால் பெரும்பாலான கல்லூரிகளில் மிகவும் அலங்கோலமான ஆடைகளில் மாணவ, மாணவியர் வருவதாக புகார்கள்கிளம்பியுள்ளன.
இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் உடை விஷயத்தில் சில முக்கிய முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம்விரைவில் எடுக்கவுள்ளது. அதன்படி மாணவர்கள் பேன்ட்-சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும். டீ சர்ட் போன்வற்றைஅணியக் கூடாது.
சட்டையும் காலர் வைத்த சட்டையாக, முழுக்கை அல்லது அரைக்கையுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஸ்லீவ் லெஸ்ஜாக்கெட், ஓபன் ஜாக்கெட் போன்ற பேஷன் சட்டைகளை அணிந்து வரக் கூடாது.
மாணவிகள் எந்த மாதிரியான உடை அணிந்து வர வேண்டும் என்பது குறித்து கல்லூரி நிர்வாகங்களிடம் ஆலோசனை நடத்திமுடிவு செய்ய பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் மாணவிகளும் டீசர்ட் அணிய தடை விதிக்கப்படவுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியரின் டிரஸ் கோட் குறித்து விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புவெளியிடும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் கேமரா செல்போன்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications