இந்தியாவில் புல்லட் ரயில்: அமைச்சர் வேலு தகவல்
வேலூர்:
இந்தியாவில் ரூ.22,000 கோடி செலவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர்வேலு கூறினார்.
இதில், சென்னையில் 5 மேம்பாலமும், அரக்கோணத்தில் ஒரு பாலமும் கட்டப்படும். மேலும், இந்தியாவில் உள்ள 16,000ஆளில்லாத ரயில்வே கேட் பற்றி கணக்கெடுக்கப்பட்டு, அவற்றில் 1,250 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கதீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 950 கி.மீ. தூரம் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படும். இதில், தமிழகத்தில் 325 கி.மீ. தூரம் பாதைஅகல ரயில் பாதையாக மாற்றப்படும். இத்திட்டம் ரூ.625 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.
மேலும் இந்தியாவில் புல்லட் ரயில் விடும் திட்டம் ஆய்வில் உள்ளது. இது சம்பந்தமாக பிரான்ஸ் நாட்டுடன் ஒரு ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் புல்லட் ரயில் விடுவதற்கு உண்டான தொழில் நுட்ப உதவிகள்,தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் அனைத்து விதத்திலும் பிரான்ஸ் அரசு பயிற்சி வழங்க உள்ளது.
இத்திட்டம் நிறைவேற 40 ஆண்டுகள் தேவைப்படும். ரூ.22 ஆயிரம் கோடி நிதியில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இந்தத்திட்டத்திற்காக தனியாக ரயில் பாதை அமைக்க வேண்டும். திட்டம் நிறைவேறினால் பெங்களுரிலிருந்து சென்னைமீனம்பாக்கத்துக்கு 50 நிமிடத்தில் வந்து விடலாம்.
இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் மீட்டர் கேஜ் இருப்புப் பாதையே இல்லை என்ற நிலை உருவாகும்.
தற்போது மைசூரிலிருந்து சென்னைக்கு பெங்களூர் வழியாக சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்துமைசூருக்கு ஒரு சதாப்தி ரயில் புதிதாக விடப்படும். இந்த ரயில் காட்பாடியில் நின்று செல்ல வேண்டும் என முன்னாள் மத்தியஅமைச்சர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். இது பரிசீலனையில் உள்ளது என்றார் வேலு.