கர்நாடகத்தில் மழை: காவிரியில் தண்ணீர் திறப்பு
பெங்களூர்:
கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பான்மையான அணைகள் நிரம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து இன்று காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டும் டெல்டா பாசன விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடமுடியவில்லை.
கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை என்றும், இதனால் அணைகளில் தண்ணீர் இல்லை என்றும் கூறி கைவிரித்துவிட்டனர்.
கர்நாடக முதல்வர் தரம்சிங்கும் இதே பல்லவியைத் தான் பாடினார். கர்நாடகத்தில் மழை பெய்தால் தண்ணீர் திறந்து விடுவோம்என்று அவர் பங்கிற்கு கூறினார்.
இந் நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் இங்குள்ள கபினி, தலைக்காவிரி, கிருஷ்ணராஜ சாகர் உட்பட பல அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.
இதையடுத்து கர்நாடக காவிரி நீர்பிடிப்பு அணைகளில் இருந்து இன்று முதல் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1000 கன அடிதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications