சேது: சாகும் வரை உண்ணாவிரதம்- தஞ்சாவூர் மீனவர்கள் எச்சரிக்கை
பட்டுக்கோட்டை:
சேதுசமுத்திர திட்ட துவக்க விழாவை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட கடலோர கிராமங்களில் மீனவர்கள் கறுப்புக்கொடிஏற்றினர்.
சேதுசமுத்திர திட்டத்துக்கு சில மீனவர்கள் பிரிவு மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந் நிலையில் நேற்று மதுரையில்துவக்க விழா நடந்ததால் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கல்லிவயல்தோட்டம் போன்றஇடங்களில் மீனவர்களின் வீடு, கடை, தெருக்களில் உள்ள கம்பங்களில் கறுப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு - பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் தாஜுதீன் கூறுகையில்,சேதுசமுத்திர திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத் தான் இத்திட்டம்துவக்கப்படுகிறது.
இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து துவங்கினால் கப்பலில் இருந்து வெளியாகும் எண்ணெய் கசிவு, சுற்றுச்சூழல் பாதிப்பு,கப்பல்களின் சத்தம் போன்றவற்றால் மீன்வளம் பாதிப்பு ஏற்படும்.
ஏற்கனவே கச்சத்தீவை மத்திய அரசு விட்டுக் கொடுத்ததால் அங்குள்ள 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியானார்கள். அதேபாதிப்பு தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் ஏற்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருந்தால், இப்பகுதி மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கமுடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications