விமானத்தில் பயணி மரணம்: சென்னை விமானம் தாமதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

துபாயிலிருந்து சென்னை வந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இதனால் விமானம்உடனடியாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.

துபாயில் இருந்து 309 பயணிகளுடன் தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போதுபயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இது குறித்து பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் உடனடியாக மும்பை விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிகேட்டார். இதற்கு அனுமதி கிடைக்கவே அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

டாக்டர்களுக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து பரிசோனை நடத்தினர். ஆனால் அதற்குள்அந்தப் பயணி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அந்த பயணியின் உடல் மும்பை விமான நிலையத்தில் இறக்கிவைக்கப்பட்டது.

இதன் பிறகு விமானம் சென்னை நோக்கி புறப்பட்டது. இதனால், வழக்கமாக சென்னைக்கு இரவு 1 மணிக்கு வர வேண்டியஅந்த விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு வந்தடைந்தது.

சென்னை வந்தடையும் அந்த விமானம் பாங்காக்கிற்கு புறப்பட வேண்டியிருந்தது. அதற்காக சென்னை விமான நிலையத்தில்286 பயணிகள் காத்திருந்தனர். பயணி மரணம் காரணமாக விமானம் காலதாமதம் என்று சென்னை ஏர்போர்ட்டில்அறிவிக்கப்பட்டிருந்ததால் பயணிகள் அமைதியாக 5 மணி நேரம் காத்திருந்தனர்.

பின் சென்னை வந்தடைந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் அனைவரும் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு பாங்காக்சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+