வேளாண் பல்கலைக்கழக விழா: நாளை கோவை வருகிறார் ஜெ.
கோவை:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நாளைகோவை செல்கிறார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் ஜெயலலிதா, காலை 11 மணியளவில் கோவை வருகிறார். அவருக்குவிமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில்அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு வேளாண்பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.
பல்கலைக்கழக அரங்கில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் விழாவில் நூற்றாண்டு விழா மலரை அவர் வெளியிடுகிறார்.மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு அலங்கார வளைவு மற்றும் நினைவு ஸ்தூபியை அவர்திறந்து வைக்கிறார். இது தவிர பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பல்வேறு கட்டிடங்களையும் அவர் திறந்து வைக்கிறார்.
பின்னர் சிறந்த 15 விவசாயிகளுக்கு வேளாண்மை செம்மல் பட்டமும், சிறந்த 5 பேராசிரியர்களுக்கு விருதுகளையும் அவர்வழங்குகிறார்.
பலத்த பாதுகாப்பு:
இதே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் தான் தர்மபுரியில் வைத்து எரிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகுஜெயலலிதா இங்கு வருவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த விழாவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கவனிப்பதற்காக டிஜிபி அலெக்சாண்டர் இன்று கோவை வருகிறார்.
இதற்கிடையே கோவை வரும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக எச்சரித்துள்ளது.சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக்கோரி ஜெயலலிதா வரும் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம்செய்யப்போவதாக திமுக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications