For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசியில் பட்டாசு ஆலையில் தீ: 10 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதில் ஐந்து பெண்கள் உட்பட 10தொழிலாளர்கள் கருகி இறந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன.

இங்குள்ள வடிவேல் பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் தீப்பிடித்தது. இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டசுகள்வெடித்துச் சிதறின.

இதில் தொழிற்சாலை தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் ஜக்கம்மாள் (வயது 50), மாரிச்செல்வி ( வயது 21), கனகம்மாள்(வயது 41), ராமலெட்சுமி (வயது 28), மாரியம்மாள் (வயது 45), சீனிவாசன் (வயது 65) ஆகியோர் உட்பட 10தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக சிவகாசி மற்றும் மதுரைமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X