குற்றாலத்தில் விபசாரம்: 12 பெண்கள், அதிமுக பிரமுகர் கைது
குற்றாலம்:
குற்றாலத்தில் பெங்களூர் பெண்களை வைத்து விபசாரம் செய்த அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் வருடந்தோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை சீசன் களை கட்டும். இங்குள்ளஅனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காகவே தமிழகம், கேரளா உட்பட பலமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சீசன் களை கட்டும் அதை வேளையில், வெளிமாநிலங்களில் இருந்து விபசார பெண்களும் இங்குபடையெடுப்பார்கள்.
குற்றாலத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு"குற்றாலம் சேகர்' என்றும் ஒரு பெயர் உண்டு. நெல்லை மாவட்ட ஜெ.பேரவைசெயலராக இருந்த இவர், குற்றாலத்தில் டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தலைமை அறிவித்த நபருக்கு எதிராகஇன்னொருவரை நிறுத்தியதால் கட்சி பதவி பறிக்கப்பட்டவர். தற்போது
குற்றாலம் ராமவர்மபுரம் காலனியில் ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து இவர் விபசார தொழில் செய்வதாகபோலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன் பேரில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அந்த பங்களாவில் திடீர்சோதனை நடத்தினார்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஆண்களும், பெண்களும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். காம்பவுண்ட் சுவரை தாண்டிதப்பி ஓட முயன்ற குற்றாலம் சேகர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த சொப்ன தாஸ் (வயது 32), பிரியா (வயது 19), ராதா (வயது 20),பிரியா (வயது 25) உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.