For Daily Alerts
Just In
ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு: திமுக கண்டனம்
சென்னை:
சாலைப் பணியாளர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுகவினர் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதிமறுத்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்காக போலீஸ் அனுமதி கோரி விண்ணப்பித்தனர். ஆனால் முதல்வர் வருகையையொட்டி ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார்அனுமதி மறுத்து விட்டனர். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை திமுக தலைமைக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பிரதமர் மன்மோகன் சிங்மதுரைக்கு வந்திருந்த போது அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது.
ஆனால் தற்போது கோவை திமுகவினர் சாலைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது அதுமறுக்கப்பட்டுள்ளது.
காவல் துறையின் நடவடிக்கை பாரபட்சமானது, கண்டனத்துக்குரியது என்று திமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Monday, July 4, 2005, 5:30 [IST]