வாக்காளர் பட்டியல்: ஓ.பி. வழக்கு தள்ளிவைப்பு
சென்னை:
போலி வாக்காளர்கள் சேர்ப்பு தொடர்பாக அதிமுக தேர்தல் குழு செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ அறிவித்தார்.
இதையடுத்து போலி வாக்காளர் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்ஆணையம் அறிவித்தது.
இந் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் போலி வாக்காளர்விண்ணப்பங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை. இந்த விஷயத்தில் அதிமுக மீது நடவடிக்கை எடுக்க தேர்தல்ஆணையத்திற்கு உரிமை கிடையாது.
எனவே அதிமுக மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை முதலில் நீதிபதி பி.டி.தினகரன் விசாரித்தார். பின்னர் இதை டிவிஷன் பெஞ்ச்சுக்கு மாற்றுவதாக அவர்அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இந்த மனு மீது இன்று தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விசாரணை நடத்தினார். அதன் பின்னர் நீதிபதிமிஸ்ரா தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதாகவும், வருகிற 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாகவும்அறிவித்தார்.












Click it and Unblock the Notifications