நுழைவுத் தேர்வு வழக்கு: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. இருப்பினும் அதை அடுத்த ஆண்டு முதல்அமல்படுத்தலாம் என உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விடுமுறை கால நீதிபதிகள்தர்மாதிகாரி, கபாடியா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் பி.பி.ராவ், மாணவர்கள் தரப்பில் நளினி சிதம்பரம், கே.எம்.விஜயன் உள்ளிட்டோர்ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை கோடை விடுமுறைக்குப் பின்னர் (ஜூன் 14ம்தேதிக்குப் பிறகு) விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
அதேசமயம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதிக்கக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கமறுத்தனர்.












Click it and Unblock the Notifications