இந்து மக்கள் கட்சி தலைவர் கொலை: 7 பேர் கைது
மதுரை:
மதுரையில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் காளிதாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிஉள்ளிட்ட 7 பேரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாநகர காவல் ஆணையர் விஜயக்குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைநடந்து வந்தது. இந்த விசாரணையின் போது, இமாம் அலியின் கூட்டாளிகள் தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்பதுதெரியவந்தது.
இந் நிலையில் நெல்பேட்டையைச் சேர்ந்த இப்ராகிம்ஷா என்பவரை திருப்பரங்குன்றம் மலையில் வைத்து போலீஸார்பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மைதீன் பீர், ஹக்கீம், ஷேக் அலாவுதீன், முகம்மது அனீஸ், பிலால் ஆகியோர்பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். இந் நிலையில், இக்கொலைக்கு முக்கியமூளையாக இருந்து செயல்பட்டவரான நெல்பேட்டையைச் சேர்ந்த மன்னர் மைதீன் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில்சரணடைந்தார். அவரையும் மதுரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
பிடிபட்ட 7 பேரும் மதுரை 1வது குற்றவியல் நீதிபதி சுபத்ரா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 18ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.