தமிழகத்தில் உஷார் நிலை: கோவையில் பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அயோத்தியில் நடந்த தாக்குதலையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாகவும் டிஜிபி அலெக்ஸாண்டர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

போலீசார் மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் கண்காணிப்பையும்பாதுகாப்பையும் அதிகரித்துள்ளோம். மாநிலம் முழுவதுமே முழு அமைதி நிலவுகிறது. முக்கிய இடங்களுக்கு போலீஸ்பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது என்றார்.

சென்னை கமிஷ்னர் நட்ராஜ் கூறுகையில், மாநகர போலீசார் முழுமையான உஷார் நிலையில் உள்ளனர். ரயில் நிலையங்கள்,விமான நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

கோவையில்..

மதக் கலவரத்துக்கு பேர் போன கோயம்புத்தூரில் மாவட்ட நிர்வாகம் அதி தீவிர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.சிறுபான்மையினர் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கலாம் வருகை:

கோவைக்கு இன்றிரவு ஜனாதிபதி அப்துல் கலாம் வருகை தர இருப்பதால் ஏற்கனவே இங்கு பாதுகாப்புஅதிகமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உளவுப் பிரிவு போலீசாரின் கண்காணிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு மேலும் அதிகமாக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், மேட்டுப்பாளையம், போதனூர் உள்ளிட்ட இடங்களில் மதரீதியில் பதற்றம் மிக்க பகுதிகளில் ஆயுதம் தாங்கியபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+