வீரப்பன்: 6 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் தொடர்பான ஒரு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரை சென்னைஉயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த 1996ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வீரப்பனும் அவனது கும்பலும் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ளஆரிப்பாளையம் என்ற இடத்தில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில், போலீஸ்காரர் செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஐ.ஜி. தமிழ்ச் செல்வன், டி.எஸ்.பி. மோகன் நவாஸ்,இன்ஸ்பெக்டர் இக்னேஷியஸ் லயோலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இக் கும்பலைச் சேர்ந்த 13 பேரை (வீரப்பன், பேபி வீரப்பன், மாதேஸ்வரன் தவிர)அதிரடிப்படையினர் கைது செய்தனர். இவர்கள் மீது ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, துப்பாக்கி சித்தன், மகாதேவன், சிவா, ஏழுமலை, குள்ள மதன், குள்ள பாஷா ஆகியோருக்குஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி அரசுத் தரப்பிலும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கற்பக விநாயகம், ஜக்காரியா ஹூசேன் ஆகியோர், தண்டனைவிதிக்கப்பட்ட 6 பேர் மீதான புகார்களையும் போலீஸ் தரப்பு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை.

இவர்கள் வீரப்பனுக்கு உதவினார்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை என்று கூறி 6பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+