நாடு முழுவதும் இன்று பாஜக போராட்டம்: சென்னையிலும் நடந்தது
சென்னை:
அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
அயோத்தி ராமஜென்ம பூமி வளாகத்தில் நேற்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 6தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் சென்னை பொது மருத்துவமனை எதிரில் இன்று காலை 11 மணியளவில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக செயலாளர் இல. கணேசன், தமிழக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர்,எம்.பி., பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ்ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர்.
சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications