தமிழக கோவில்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அயோத்தி ராம ஜென்ம பூமியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து, சென்னையில் உள்ள முக்கியக் கோவில்களுக்குபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சென்னை மாநகர காவல்துறைஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள முக்கியக் கோவில்களான திருவல்லிக்கேணிபார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு, மாங்காடு அம்மன்கோவில்கள் உள்ளிட்ட முக்கியக் கோவில்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் போலீஸார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். மெட்டர்டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்ற சோதனையும் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் பீதியடைத்தேவையில்லை. கோவிலுக்கு வழக்கம் போல வந்து செல்லலாம்.

இதுதவிர மாநகர காவல் துறையின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.சென்னையின் பிற முக்கிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார் நடராஜ்.

இதே போல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் பார்த்தசாரதி கோவில், பழனி, திருச்செந்தூர் உட்பட பக்தர்கள்பெருமளவில் வரும் முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+