பிச்சையெடுக்கும் போராட்டம்: சாலைப் பணியாளர்கள் கைது
சென்னை:
தமிழகம் முழுவதும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது 10,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போதையஅதிமுக அரசு பதவியேற்றவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 10,000 பேருக்கும்வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடுசெய்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் மீண்டும் வேலை தரக் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்த சாலைப் பணியாளர்கள் இன்றுதலைநகர் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சாலைகளில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாகஅறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சாலைப் பணியாளர்கள் நேற்றே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககைது செய்யப்பட்டனர். ரயில் மூலம் சென்னைக்கு வந்த சாலைப் பணியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் மீறி ஏராளமான சாலைப் பணியாளர்கள் சென்னையில் குழுமினர். இன்று காலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம்அருகே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் அவர்கள் மாநிலத் தலைவர் சண்முகராஜா தலைமையில் ஈடுபட்டனர். அப்போதுஅவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
ஈரோட்டில் மாநிலத் துணைத் தலைவர் வெள்ளியங்கி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டஆயிரக்கணக்கான சாலைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் என வெளி மாநிலங்களுக்கு குடும்பத்தோடு சென்று பிச்சைஎடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக சாலைப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சண்முகராஜா அறிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications