நாகர்கோவில்: தீவிபத்தில் 6 பேர் பலி
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கடைகளில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 6 பேர் உயிரோடு எரிந்து பலியானார்கள்.
நாகர்கோவில் சந்தைப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர் கடைக்குவெளியே படுத்துத் தூங்கியுள்ளார். கொசுத் தொல்லையால், கொசுவர்த்தியை பொருத்தி வைத்து அவர் படுத்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் கொசுவர்த்தியிலிருந்து கிளம்பிய பொறி அவரது கடையில்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து மளமளவென தீ பக்கத்தில் இருந்த கடைகளுக்குப் பரவியது.
இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து அறிந்ததும் நாகர்கோவில், தக்கலை உள்ளிட்டபல்வேறு பகுதிகளிலிருந்து 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாகப்போராடின.
இந்தக் கோர தீவிபத்தில் 6 பேர் இறந்து விட்டனர். பல கோடி பெருமானமுள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.