ஜீவஜோதி வழக்கு: கோர்ட்டில் ராஜகோபால் ஆஜர்
திருத்துறைப்பூண்டி:
ஜீவஜோதியை அவரது வீட்டிலிருந்து கடத்த முயன்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில்சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் ஆஜரானார்கள்.
கடந்த 2003ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி திருவாரூர் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தில்,ஜீவஜோதியை காரில் கடத்த முயன்றதாக ராஜகோபால் அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை)விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அதேபோல ஜீவஜோதி, அவரது தந்தை ராமசாமி, சகோதரர் ராம்குமார் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். ஆனால்வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து விசாரணையை வருகிற21ம் தேதிக்கு நீதிபதி ராம்ராஜ் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications