For Daily Alerts
Just In
மீனவர்களை மீட்க பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் 9 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பிரதமர்மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்புகடலில் மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்டு இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் 9 பேரின் குடும்பங்களுக்கும் நிம்மதி தர மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். தாங்கள் இதுதொடர்பாக உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கோரியுள்ளார்.
இதேபோல வெளியுறவு அமைச்சர் நிட்வர் சிங்குக்கும் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
Comments
Story first published: Friday, July 8, 2005, 5:30 [IST]