மீனவர்களை மீட்க பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் 9 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பிரதமர்மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்புகடலில் மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்டு இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் 9 பேரின் குடும்பங்களுக்கும் நிம்மதி தர மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். தாங்கள் இதுதொடர்பாக உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கோரியுள்ளார்.
இதேபோல வெளியுறவு அமைச்சர் நிட்வர் சிங்குக்கும் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications