குற்றவியல் சட்டத் திருத்தம்: கைவிட கருணாநிதி கோரிக்கை
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில திருத்தங்கள் மக்கள் நலனுக்கு எதிராக இருப்பதாக கருத்துஎழுந்துள்ளதால் அவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதிருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால், வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் தீக்குளிப்பில் ஈடுபட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்தால் மக்களுக்கும் பாதகம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது. எனவே இந்தசட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கறிஞர்களும் தீவிரமான நடவடிக்கைகளை கைவிட்டு, மக்கள் நலனைக் கருதி, நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டும் எனகருணாநிதி கூறியுள்ளார்.