நெல்லையப்பர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் உள்ள புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலை வெடிகுண்டு வைத்துத்தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளதால், கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் பகுதியில் உள்ளது பழமையான நெல்லையப்பர் கோவில். சுற்றுலா முக்கியத்துவம் இந்தகோவிலின் நிர்வாக அதிகாரிக்கு இன்று காலை ஒரு கடிதம் வந்தது. மேலப்பாளையத்திலிருந்து இந்தக் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், நெல்லையப்பர் கோவில் குண்டு வைத்துத் தகர்க்கப்படும். கோவிலைப் பாதுகாக்க எவ்வளவுபோலீஸாரை நிறுத்தினாலும், எத்தகைய பாதுகாப்பைக் கொடுத்தாலும் அதையும் மீறி எங்களது திட்டத்தைநிறைவேற்றுவோம் என்று கூறப்பட்டிருந்தது.
மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவிலின் நுழைவாயிலில்மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டு கோவிலுக்கு வருபவர்கள் சோதனையிடப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications