இந்திரா குறித்து அவதூறு: நிக்ஸன் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

இந்தூர்:

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சூனியக்கார கிழவி என்று கூறிய அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்ஸன் மீது ரூ. 100 கோடிஅமெரிக்க டாலர் கேட்டு இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள் தொடர்பான ஆவணங்களை சம்பவம் நடந்த 30 ஆண்டுகள் கழித்துபகிரங்கப்படுத்த வேண்டும் என்பது அந்தத நாட்டின் சட்டமாகும்.

இதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆவணங்கள் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளன. இதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்ஸன், முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியைசூனியக்கார கிழவி என்று மோசமாக பேசியதாக கூறப்பட்டுள்ளது.

இது தற்போது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், இந்திரா காந்தியை அவதூறாக பேசியஅமெரிக்க முன்னாள் அதிபர் நிக்ஸன் மீது 100 கோடி அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்டு இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஷோபா தர்மாதிகாரி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குஜராத் மக்களுக்குப் பயன்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வருகிற 11ம் தேதி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+