குவைத்தில் பாலியல் சித்திரவதை: தமிழக பெண் மீட்பு
சென்னை:
குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்று, வீட்டின் சொந்தக்காரர்களால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானஅருப்புக்கோட்டையைச் சேர்ந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காளையார்கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் வீட்டுவேலைக்காக குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் வேலை பார்த்து வந்த வீட்டைச் சேர்ந்த ஆண்கள் சுப்புலட்சுமியை பாலியல்பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்த சுப்புலட்சுமியை, வெளியில் நடமாடுவதற்குத் தேவையானமுறையான அனுமதி இல்லாத காரணத்தால் குவைத் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த சுப்புலட்சுமியின் கணவர் நரசிம்மப் பெருமாள், தனது மனைவியை மீட்டு தமிழகத்திற்குக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து சுப்புலட்சுமியைமீட்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கான குடிபெயர்வோர் பாதுகாப்பகம் மற்றும்குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தமிழக காவல்துறை அதிகாரிகள் சுப்புலட்சுமியை மீட்பதற்கானநடவடிக்கைகளில் இறங்கினர்.
இதன் விளைவாக சுப்புலட்சுமி பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று முன்தினம் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்குஅழைத்து வரப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.