சிவகாசி: பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவகாசி அருகே கொசவப்பட்டி கிராமத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலை தீவிபத்தில் பலியான 8 பேரின்குடும்பங்களுக்கு தலா ரூ. 1லட்சம் நிதியுதவியை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
கொசவப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் சமீபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர்உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உதவ வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறைஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரதமருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று பலியான 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1லட்சம் வழங்க பிரதமர் மன்மோகன் சிங்ஆணையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications