வீராணம் ஏரி வற்றுகிறது; சென்னைக்கு நீர் வரத்து குறைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீராணம் ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், அதிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காகஎடுக்கப்படும் நீரின் அளவை சென்னை குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) குறைத்து விட்டது.

சென்னையைச் சுற்றிலும் உள்ள முக்கியமான நான்கு ஏரிகளிலிருந்து தான் இதுவரை சென்னை நகருக்கு குடிநீர்விநியோகிக்கப்பட்டு வந்தது. இது போதாது என்ற நிலை ஏற்பட்டதால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர்கொண்டு வரப்பட்டு அது சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வீராணம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து விட்டதால் ஏரியின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. வீராணம்ஏரியில் தற்போது 330 மெட்ரிக் கன அடி நீர் மட்டுமே உள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 1470 மெட்ரிக் கன அடியாகும்.

இதனால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு எடுக்கப்படும் நீரின் அளவை மெட்ரோ வாட்டர் குறைத்து விட்டது. பத்துநாட்களுக்கு முன்பு வரை வீராணம் ஏரியிலிருந்து தினசரி 77 கன அடி நீர் எடுக்கப்பட்டது. தற்போது அது 57 கன அடி நீராககுறைக்கப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியில் தற்போதுள்ள நீரின் அளவை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே சென்னைக்குதண்ணீர் எடுக்க முடியும்.

தற்போது சென்னை நகரின் குடிநீர் வினியோகம் 680 மில்லியன் லிட்டராக உள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்வினியோகம் நடந்து வருகிறது.

செப்டம்பர் மாத இறுதி வரை இந்த அளவிலேயே தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகளில்மெட்ரோ வாட்டர் இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+