7 நாட்களில் தண்டனை: போலீஸுக்கு ஜெ. பாராட்டு
சென்னை:
குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக போலீஸாரை முதல்வர் ஜெயலலிதாபாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி தண்டிக்கப்படுவார்கள்என்ற நம்பிக்கையை பொதுமக்கள் பெறும் வகையில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரியதண்டனையை விரைந்து பெற்றுத் தரவேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக காவல் துறை, தமிழகத்தில் குற்ற எண்ணிக்கையை குறைத்து குற்றங்களைகண்டுபிடிக்கும் சதவீதத்தை உயர்த்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தந்து சாதனை படைத்து வருகிறது.
முதலில் ஒரு கொலை வழக்கில் 44 நாட்களில் தண்டனை பெற்றுத் தந்து சாதனை படைக்கப்பட்டது. இதன் பிறகு 29 நாட்களில்,17 நாட்களில், 16 நாட்களில், 8 நாட்களில் என குறைந்து இப்போது வெறும் ஏழே நாட்களில் குற்றவாளிகளுக்கு தண்டனைபெற்றுத் தந்து தமிழக காவல் துறை சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு சாதனை படைத்துள்ள சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடராஜுக்கும், தமிழகக் காவல் துறையின் ஏனையஅலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications