நகை மோசடி: ஜெயலட்சுமி வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடக்கம்
திருச்சி:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நகைக் கடை அதிபரிடம் ரூ. 45,000 மதிப்புள்ள நகையை வாங்கிக் கொண்டுஜெயலட்சுமி மோசடி செய்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நகைக் கடை வைத்திருப்பவர் திருமூர்த்தி. இவரை அணுகிய ஜெயலட்சுமி,தான் அரவக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவின் மனைவி என்று கூறி ரூ. 45,000 மதிப்புள்ள தங்கநகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மே 27ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. நேற்று சாட்சிகள் விசாரணைதொடங்கியது. இதையடுத்து ஜெயலட்சுமி, அரவக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு ஆகியோர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
முதலில் நகைக் கடை அதிபர் திருமூர்த்தி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், ஈரோடு சப் இன்ஸ்பெக்டராகதன்னை ஜெயலட்சுமி அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவின் மனைவிஎன்றும் கூறிக் கொண்டார்.
இதையடுத்து அவர் கேட்ட ரூ. 45,000 மதிப்புள்ள நகைகளை ஜெயலட்சுமியிடம் கொடுத்தேன். ஆனால் அவர்பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று தெரிவித்தார் திருமூர்த்தி.
அவரது சாட்சியத்தைத் தொடர்ந்து வருகிற 27ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications