24 குளித்ததை மறைந்திருந்து பார்த்து ரசித்த 70
கோவை:
கோவை அருகே இளம் பெண் குளித்ததை மறைந்திருந்து பார்த்து ரசித்த 70 வயது தாத்தாவை போலீஸார் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. 24 வயதான இவர் திருமணம் ஆனவர். இவரதுவீட்டுக்கு அருகே வசிப்பவர் பழனிச்சாமி. இவருக்கு வயது 70.
ஒருமுறை, மகேஸ்வரி தனது வீட்டுக்குப் பின்புறம் தோட்டத்தில் குளித்த போது அதை பழனிச்சாமி மறைந்திருந்து பார்த்துரசித்துள்ளார். இதைப் பார்த்து விட்ட மகேஸ்வரி, பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று நினைத்து பேசாமல் விட்டுவிட்டார்.
இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட தாத்தா, தினசரி மகேஸ்வரி குளிக்கும் போது பார்ப்பதை வழக்கமாக்கி விட்டார்.இதனால் கோபமடைந்த மகேஸ்வரி, போகப் போற காலத்தில் இப்படி ஒரு புத்தியா என்று தாத்தாவுடன் சண்டைபோட்டுள்ளார்.
அதற்கு பழனிச்சாமி, இதை வெளியே சொன்னால் உனக்குத் தான் அவமானம். மீறி சொன்னால் தொலைத்து விடுவேன் என்றுமிரட்டியுள்ளார்.
இதையடுத்து கோவை 7வது குற்றவியல் நீதிமன்றத்தில் மகேஸ்வரி புகார் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படிசெட்டிப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் தாத்தாவை போலீஸார் கைது செய்தனர்.
இளம் பெண் வெளியே குளித்ததைப் பார்த்து ரசித்த தாத்தா, இப்போது உள்ளே இருக்கிறார்.