கட்டப்பஞ்சாயத்து: போலீஸார் மீது நடவடிக்கை- உயர்நீதிமன்றம்
சென்னை:
கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கோபால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல்செய்தார். அதில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள்
பாதிப்புக்கு உள்ளான எங்கள் குடும்பத்துக்கு ஒரு படகு வழங்கப்பட்டது. அந்தப் படகை குப்பத்துக்கு தர வேண்டும் என்றுநல்ல தண்ணீர் ஓடை குப்பம் மீனவர் கிராம சபாவினர் கூறினர். அதற்கு எனது தாயார் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், எங்களை பஞ்சாயத்து முன்பு நிறுத்தி 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.அதையடுத்து 40 ஆயிரம் ரூபாயாக அபராதம் குறைக்கப்பட்டு பணத்தை வசூலித்தனர்.
குப்பத்தை சேர்ந்த பஞ்சநாதன் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து மூன்று படகுகளை வாங்கினர். இதையும் பஞ்சாயத்தில்ஒப்படைக்க வேண்டும் என்று பஞ்சாயத்துக்காரர்கள் வற்புறுத்தினர். அவர்கள் மறுக்கவே அவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம்அபராதம் விதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
அவர்கள் பணத்தை செலுத்தாததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இந்த மிரட்டல் தொடர்பாக திருவொற்றியூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தும் அதை பதிவு செய்யவில்லை. போலீசில் புகார் கொடுத்ததால் எங்களையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர்.
எனவே, திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் நான் அளித்த புகாரை பதிவு செய்து விசாரிக்குமாறு
இந்த மனு தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டுகள்
அபராதம் விதிப்பது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றவற்றை ஒரு தனியார் அமைப்பு செய்ய முடியாது. தமிழகத்தில்கட்டப் பஞ்சாயத்து மூலம் குண்டர் ராஜ்யம் நடப்பது உ
இந்த மனுவையே புகாராக எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் பதிவு செய்து அதை விசாரிக்குமாறு போலீசாருக்குஉத்தரவிட வேண்டும். அபராதத் தொகை வசூலிக்கப்பட் டது உண்மை என்றால் அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 5ம் தேதி உத்தரவிட்டனர்.
தற்போது இந்த வழக்கில் மேலும் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், ஏற்கனவே கட்டப் பஞ்சாயத்துதொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை:
இந்த
போலீசார் மற்றும் அதிகாரிகளின் உடந்தையில்லாமல் கட்டப் பஞ்சாயத்து முறை அதிகரிக்க முடியாது. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவில்லை என்றால் ஜனநாயக நாட்டில் சட்ட ஒழுங்கு படிப்படியாகசீர் குலையும்.
எனவே, இந்த சட்ட விரோத, விஷமத்தனமான நடவடிக்கைகளை சட்டப்படி ஒடுக்கவேண்டுமென்று மாநில அரசுஅதிகாரிகளுக்கு
இந்த
கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இந்த
உயர்நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக இந்த மனுவை 3 மாதங்களுக்கு ஒருமுறை விசாரணைக்காக எங்கள் முன் பட்டியலிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications