ஈரோடு அருகே சாலைப் பணியாளர் தற்கொலை
ஈரோடு :
ஈரோடு அருகே வறுமையின் கொடுமையால் சாலைப் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்கள் அனைவரும் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். இதனால் இவர்களது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது.
தங்களுக்கு வேலை தரக்கோரி இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை தமிழக அரசுஇவர்களது கோரிக்கயை ஏற்கவில்லை.
வறுமையின் கொடுமையால் தமிழகத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்த முத்துசாமி என்ற சாலைப் பணியாளரும்நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
வேலை பறி போனதால் இவரது குடும்பம் கடந்த சில வருடங்களாக கடும் வறுமையை சந்தித்தது. இதனால் மனம் உடைந்தஇவர், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட முத்துசாமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications