மாணவிகளிடம் "செக்ஸ் சேட்டை; ஆசிரியர் கைது
கோவை:
பொள்ளாச்சி அருகே மாணவிகளை விடுதிக்கு அழைத்துச் சென்று, மது அருந்தி விட்டு அவர்களிடம் பாலியல் சேஷ்டையில்ஈடுபட்ட ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் கனகராஜ். இவர் ஆனைமலை ஒன்றிய தொடக்கப் பள்ளியில்வேலை பார்த்து வருகிறார்.
42 வயதாகும் கனகராஜ், தனது பள்ளியில் 5வது வகுப்பு படிக்கும் இரு மாணவிகளை (அவர்களுக்கு வயது 10) அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து மாணவிகளை அந்த அறைக்குள் அழைத்துச்சென்றார்.
பின்னர் மது அருந்தி விட்டு மாணவிகளிடம் பாலியல் சேஷ்டையில் அவர்ர ஈடுபட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தமாணவிகள் கனகராஜிடமிருந்து தப்ப முயன்றனர்.
இதற்கிடையே, 2 மாணவிகளுடன் ஆசிரியர் விடுதிக்கு வந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் சென்றது. போலீஸார்விரைந்து சென்று அறையை சோதனை போட்டனர். அப்போது 2 மாணவிகளிடமும் கனகராஜ் செக்ஸ் சில்மிஷத்தில்ஈடுபட்டதைப் பார்த்து அதிர்ந்தனர்.
ஆசிரியரை கைது செய்த போலீஸார், இரு மாணவிகளையும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications