லாரிகள் மோதலில் 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியதில் 4 பேர் பரிதாபமாகஇறந்தனர்.
சென்னையிலிருந்து ஆற்காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரும்பு குழாய்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது.காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் என்ற இடத்தில் அந்த லாரி பழுதடைந்து நின்று விட்டது.
இந்த சமயத்தில், சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, பழுதடைந்து நின்று கொண்டிருந்த லாரி மீதுமோதியது. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவர், கிளீனர் உள்பட 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
இறந்தவர்கள் அனைவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. எனவே அவர்கள் யார் என்ற விவரம் உடனடியாகத்தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications