For Daily Alerts
Just In
இந்துக்களைப் புண்படுத்தும் கட்டுரை: கருணாநிதிக்கு சம்மன்
சென்னை:
இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் கட்டுரை எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில் கருணாநிதிக்கு இன்று சம்மன்வழங்கப்பட்டது.
சென்னை தியாகராய நகரை சேர்ந்த கெளதமன் என்பவர் திமுக தலைவர் கருணாநிதி மீது மாம்பலம் போலீஸில் ஒரு புகார்செய்தார். அதில், இந்துக்களின் மனது புண்படும் விதத்தில் கருணாநிதி முரசொலியில் கட்டுரைகள் எழுதுவதாககுறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போதுவருகிற 25ம் தேதி கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கான சம்மனை மாம்பலம் போலீஸார் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு சென்று கொடுத்தனர்.
Story first published: Sunday, July 10, 2005, 5:30 [IST]