4 விடுதலைப் புலிகள் பலி: கருணா ஆதரவாளர்கள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
திரிகோணமலையில் விடுதலைப் புலிகள் அலுவலகம் மீது இன்று கருணா ஆதரவாளர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 4புலிகள் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், கருணா ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தமோதலில் இரு தரப்பிலும் இதுவரை ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.
இந் நிலையில் திரிகோணமலை மாவட்டத்தில் உப்பவேலி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் அலுவலகம் மீது இன்றுவேனில் வந்த சிலர் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை கருணா ஆதரவாளர்கள் தான் நடத்தியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications