பெண் போலீஸுடன் அரட்டை: ஏட்டு சஸ்பெண்ட்
கோவை:
கோவையில் பணி நேரத்தில் பெண் போலீஸுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
கோவை காட்டூர் போலீஸ் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் பரமசிவம். கடந்த 4ம் தேதிமுதல்வர் ஜெயலலிதா கோவைக்கு வந்த போது இவருக்கு அவினாசி மேம்பாலத்தில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
பணி நேரத்தில் பரமசிவம், பெண் போலீஸ் ஒருவருடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்துள்ளார். அந்தநேரத்தில்அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பரமசிவமோ அதைப் பற்றியெல்லாம்கவலைப்படாமல் கருமமே கண்ணாக அந்தப் பெண் போலீஸுடன் அரட்டையைத் தொடர்ந்துள்ளார்.
இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி போலீஸ் கமிஷனர்ரத்தின சபாபதி பரமசிவத்தைக் கண்டித்தார். பின் அவர் இது குறித்து போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹாவிடம் புகார் கூறினார்.
இதையடுத்து தலைமைக் காவலர் பரமசிவத்தை, கமிஷனர் கரன் சின்ஹா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications