தலையில் தேங்காய் உடைக்க தடை வரும்: மனித உரிமை ஆணையம்
கரூர்:
நேர்த்திக் கடன் என்ற பெயரில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பதற்கு தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு மனிதஉரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி சம்பந்தம் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள மகாதானபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும்ஆடித் திருவிழாவின் போது, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் வரிசையாக உட்கார்ந்திருக்க, அவர்களது தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்து,பக்தர்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார். இந்த நூதன நேர்த்திகடன் நிகழ்ச்சியால் பக்தர்களின் மூளைக்கு பாதிப்புஏற்படும் எனவும்,
எனவே இந்த நேர்த்திக் கடன் முறைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மாநில மனித உரிமை ஆணையத்திற்குகோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
இந் நிலையில் கரூர் வந்த நீதிபதி சம்பந்தம் இதுகுறித்துக் கூறுகையில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிக்குத்தடை விதிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் வந்துள்ளன.
இந்த கொடூர முறையைத் தடுக்க மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
இதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.
தலையில் தேங்காய் உடைப்பது தடுக்கப்படும் என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சம்பந்தம் கூறியுள்ளதால்,வருகிற ஆடி 18ம் தேதி திட்டமிட்டபடி தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுமா என்ற கேள்வி பக்தர்கள் மனதில்எழுந்துள்ளது.