தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு
சேலம்:
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை,வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக சேலம் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவியர் பயணம் செய்த பேருந்து தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி என்ற இடத்தில்அதிமுகவினரால் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் 3 மாணவிகள் உயிரோடு கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சாட்சிகள் விசாரணை நடந்துவருகிறது. மொத்தம் உள்ள 386 சாட்சிகளில் இதுவரை 60 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும்நடத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, எதிர் தரப்பு(அதிமுக தரப்பு) வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
இதனால் வழக்கு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு நீதிபதி கிருஷ்ணராஜா ஒத்திவைத்தார். வழக்கையொட்டி முன்னாள்அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட 33 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.