தமிழக-கர்நாடக விவசாயிகள் 13ம் தேதி சந்திப்பு
திருச்சி:
தமிழக மற்றும் கர்நாடக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் 13ம் தேதி மைசூரில் சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளனர்.
இரு மாநில காவிரிப் பாசன விவசாயிகளும் அடிக்கடி சந்தித்து, தங்களது பகுதி விவசாய சூழ்நிலை குறித்து விவாதித்துவருகின்றனர். காவிரி நீரை எப்படிப் பங்கிடுவது என்பது குறித்தும் ஆலோசித்து அரசுக்கும் அறிவுரைகள் கூறி வருகின்றனர்.
இதுவரை மொத்தம் 6 முறை இரு தரப்பினரும் இரு மாநிலங்களிலும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில், இரு மாநில விவசாயிகளும் மீண்டும்சந்திக்க முடிவு செய்துள்ளனர். வருகிற 13ம் தேதி மைசூரில் இந்த சந்திப்பு நடக்கிறது.
இதற்காக தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் அடங்கிய குழு, இன்று (திங்கள்கிழமை) மைசூர் செல்கிறது. 3நாட்களுக்கு அங்கு கர்நாடக விவசாயிகளுடன் தமிழக விவசாயிகள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். இதன் பிறகு கர்நாடககிராமங்களுக்கும் சென்று பாசனத்தை நேரடியாக பார்வையிடுவார்கள்.












Click it and Unblock the Notifications