மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பயிலும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2001ம் ஆண்டு பிளஸ் ஒன், பிளஸ் டூ பயிலும், ஆதி திராவிடர்,பழங்குடியினர் இன மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவியருக்கும்இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 4,64,000 மாணவியர் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 2,10,000 மாணவியர் பயனடைய உள்ளனர். மாணவிகளுக்கு வழங்குவதைப் போல தங்களுக்கும் இலவசசைக்கிள்களை அரசு வழங்க வேண்டும் என மாணவர் தரப்பிலிருந்து கோரிக்கை வந்தது.
இதை ஏற்று இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பயிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்ப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபுப் பிரிவுகளைச் சேர்ந்தமாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும்.
இதற்கு ரூ. 66 கோடி செலவாகும். 3,65,000 மாணவர்கள் பலனடைவர். இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் மூலம்மொத்தம் 5,75,000 மாணவ, மாணவியர் பயனடைவர். இதற்கு நடப்பு ஆண்டில் ரூ. 103.50 கோடி செலவாகும் என்றுஜெலலிதா தெரிவித்துள்ளார்.