ஜெயேந்திரரின் ஜாமீன்: உச்சநீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றது தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜெயேந்திரரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு இன்று வாபஸ்பெற்றது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் ஜாமீன்வழங்கி உத்தரவிட்டது.
இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கில் முழு விசாரணை அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவுபிறப்பித்திருந்தது.
இந் நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகதமிழக அரசின் வழக்கறிஞர் கூறினார்.












Click it and Unblock the Notifications