கபினி: தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீர் குறைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் நேற்று தண்ணீர் வரத்துவிநாடிக்கு 10,000 கன அடியானது.
கேரளா, கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்ததால் கர்நாடகத்தில் கபினி உட்பட பெரும்பாலானஅணைகள் நிரம்பின. கபினி அணை முழுவதுமாக நிரம்பும் நிலை ஏற்பட்டதால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்குதண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று முன் தினம் கபினி அணையின் நீர் வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாக உயர்ந்ததால், அணையில் இருந்துவெளியேற்றப்படும் நீரின் அளவு 30,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
இந் நிலையில் கபினி அணையின் நீர்வரத்து நேற்று 17,000 கன அடியாக குறைந்தது. இதையடுத்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நேற்று 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications