தமிழக வளர்ச்சியில் ஜெ. வுக்கு அக்கறையில்லை: வைகோ
திருவண்ணாமலை:
முதல்வர் ஜெயலலிதா, தமிழக வளர்ச்சியின் மீது சிறிதும் அக்கறை இல்லாதவர் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோகூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி, தொகுதிகளில் கட்சி ஆய்வுக்குழு கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டார். பின்னர் நிருபர்களிடம் வைகோ பேசுகையில், மதிமுக தான் சேது சமுத்திர திட்டம் செயல்படுவதற்கு முக்கிய பங்குவகித்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் நீண்ட நாள் நிறைவேற்றப்படாமல்உள்ள திட்டத்தின் கீழ் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் அப்பகுதி மீனவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு இந்ததிட்டம் உ
அவருக்கு தமிழக வளர்ச்சியில் சிறிதும் அக்கறை கிடையாது. எனது அடுத்த கனவு, தென்னக நதிகளை இணைக்கும் திட்டம்தான்.
குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து, வரும்12ம் தேதி கூட இருக்கும் மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து எங்கள் கருத்தை சட்ட அமைச்சருக்கு மனுவாககொடுப்போம்.
தமிழக அரசு மருத்துவ, பொறியியல் கல்விக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. ஆனால், காலதாமதமாகஅறிவித்தது முட்டாள்தனமானது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications