அத்வானிக்கு ஜி.கே.வாசன் அறிவுரை
சென்னை:
தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்குபாஜக தலைவர் அத்வானி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தீவிரவாதிகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு தீவிரமாக செயல்படவில்லைஎன்று அத்வானி கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அவர் இவ்வாறு கூறி வருகிறார்.
பொடா சட்டம் அமலில் இருந்தபோது தான், பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தான் நாடாளுமன்றம் மீதும்,குஜராத்தில் அக்ஷர்தம் கோவில் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய நினைக்கவில்லை. தீவிரவாதிகளை ஒடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அது தான் இப்போது முக்கியம்.
எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்து தீவிரவாதிகளைஒடுக்கும் முயற்சிகளில் அத்வானி உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.