சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் ஒருவர் கூறியதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
லண்டனில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்து இந்தியாவிலும் விமான நிலையங்கள் உட்பட முக்கியபகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், சென்னையிலுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு நேற்று ஒருபோன் கால் வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெட் விமான நிறுவன அதிகாரிகள் இது குறித்து உடனடியாக சென்னை விமான நிலையஅதிகாரிகளுக்கு கூறினர். இதைத் தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து விமானநிலையத்தில் சோதனையிட்டனர்.
ஆனால் வெடி குண்டு எதுவும் சிக்காததால், அந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. இருப்பினும் சென்னை விமானநிலையம் ஏற்கனவே தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் உள்ளதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் செல்லும் அனைத்துப் பயணிகளும், பார்வையாளர்களும் கடுமையான சோதனைக்கு பின்னரேஅனுமதிக்கப் படுகின்றனர்.












Click it and Unblock the Notifications